தொடரும் பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்

பாகிஸ்தான் ராணுவம் 2003ம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, சமீப காலமாக எல்லைக் கட்டுப்பாடு கோட்டை தாண்டி, குண்டு வீச்சு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தாண்டு ஜூன் வரை எல்லை தாண்டி நடைபெற்ற, 2,432 தாக்குதல்களில், இந்தியாவைச் சேர்ந்த, 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

இத்தகைய தாக்குதலுக்கு இடையே, ஜம்மு – காஷ்மீரில், பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்கிறது.எல்லைக் கட்டுப்பாடு கோடு மற்றும் சர்வதேச எல்லை தாண்டி நடைபெறும் இத்தகைய தாக்குதல்களையும், ஊடுருவல் முயற்சிகளையும், தொடர்ந்து இந்தியா கடுமையாக கண்டித்து வருகிறது.