திரைப்படம், அரசியல் துறைகளில் வியாபாரம் செழிக்க: ஹிந்து” விசில் போடு!

 

‘மெர்சல்’ திரைப்பட விவகாரத்தில் அப்படத்தின் கதாநாயகன் ‘விஜய்’ என்கிற ‘ஜோசப் விஜய்’ என்ற பெயர் வெளிவந்து அவர் கிறிஸ்தவர் என்பது உலகம் முழுவதும் வெளிப்படையானது! இதனால் என்ன குடிமுழுகிப் போய்விட்டது என கேட்பாருண்டு! நாமும் அதைத்தான் சொல்கிறோம்! இதனால் நமக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் நட்டம் ஒன்றுமில்லை! ஆனால் இதை இணையதளம் வெளிப்படுத்தியபோது ‘விஜய்’யின் தகப்பனார், திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் வெகுண்டு எழுந்தார். ஆடிப்போனார். ‘ஜோசப் விஜய்’ என தன் மகனை மற்றவர்கள் குறிப்பிட்டது தங்களை அவமானப்படுத்தி, தனிமைப்படுத்துவதாகும் என்றார்.

இப்போது புரிந்தது, தங்களை கிறிஸ்தவர் என்று பகிரங்கமாக காட்டிக்கொள்ள விஜய் குடும்பத்தினர் ஏன் தயாராக இல்லை என. காரணம் கிறிஸ்தவர் என்றால், ரசிகர் பட்டாளம் குறைந்துவிடும், திரைப்பட வியாபாரம் பாதிக்கும் என நினைத்திருக்கலாம். திரைப்படம் மூலம் கிறிஸ்தவத்தை பரப்ப எல்லா முயற்சிகளும் செய்வார், ஏசுநாதரின் படம்,கிறிஸ்தவ சர்ச்சுகள், மதபோதகர்கள், தானும் சிலுவை அணிவது, வசனங்களில் கிறிஸ்தவத்தை உயர்த்திப் பிடிப்பது எல்லாம் செய்வார்! ஆனால் அவரை ஜோசப் விஜய் என குறிப்பிட்டால் குமுறி எழுவார்.

இவர் மட்டுமல்ல, இவருக்கு அண்ணன் ஒருவர் அரசியலில் இருக்கிறார். ம.தி.மு.க. தலைவர் வைகோ என்னும் வை. கோபால்சாமி! அவர் கிறிஸ்தவ மதத்தை தழுவிவிட்டதாக கிறிஸ்தவ மத பிரச்சாரகர் மோகன் சி. லாசரஸ் என்பவர் பேசியது முகநூலில் பம்பரமாக சுற்றிவருகிறது! லாசரஸ் சொன்னார்: சகோதரர் வைகோ ஏசுவை ஏற்றுக்கொண்டு ஞானஸ்நானம் செய்துள்ளார். அவரது மனைவி, மகள், மகன், மருமகன்  ஆகியோரும் கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொண்டுவிட்டனர். மகனும் மகளும் அமெரிக்காவில் ஏசுவுக்கு ஊழியம் செய்கின்றனர். வைகோ பயபக்தியோடு தினசரி இரண்டு முறை பைபிள் வாசிக்கிறார்” என்று.

இதில் என்ன புதுமை? எனக்கு மட்டுமல்ல, பலருக்கு என்றோ தெரியும் அவர் மதம் மாறிவிட்டார் என்று!

கோவையை சுற்றியுள்ள நாயக்கமார் திருமணத்திற்கு அவர் வரும்போது அவரது சொந்தக்காரர்கள் ஹிந்துவாகவும் வைகோ கிறிஸ்தவராகவும் கலந்து கொள்வதை அறியாதவர் இப்பகுதியில் எவருமில்லை! இதில் பகல் வேஷம் போடும் வைகோவின் நிலைப்பாடுதான் நம்மை கோபப்படுத்துகிறது! முதலில் மதமே இல்லை என்கிற நாத்திகம் தான் இவரது கொள்கை! ஆம்! அவர் ஹிந்து நாயுடுவாக இருந்த வரை. தற்போது மதம்மாறி கிறிஸ்தவராகி தினசரி இருமுறை பைபிள் படிப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது! ஆனால் வைகோ இதை மறுக்கிறார். மதம் மாறவில்லை என பொய் சொல்கிறார். ஏன்? மதம்மாறிய கிறிஸ்தவர் எனத் தெரிந்தால், ‘அரசியல் வியாபாரம்’ படுத்துவிடும்! அது இப்போது படுத்து குறட்டைவிட்டு தூங்குகிறது என்பது வேறு விஷயம்!

திமுகவின் ஸ்டாலின் தன் கட்சியில் 98 சதவீதம் பேர் ஹிந்துக்களே என்று சொன்னவர்தான்!

ஜோசப் விஜய், வை.கோபால்சாமி என்னும் வைகோ தங்களை கிறிஸ்தவராக அறிய ஏன் விருப்பப்படவில்லை? மதப்பிரச்சாரத்துக்கும் மதம் மாற்றும் முயற்சிகளுக்கும் முழு ஆதரவு தரும் இவர்கள் ஏன் ‘ஹிந்து போர்வையில்’  ஒளிந்துகொள்ள விரும்புகிறார்கள்?

இவர்கள் மட்டுமல்ல, சீமான், திரைப்பட இயக்குனர் கௌதமன், மே-17 இயக்க திருமுருகன் காந்தி, தா. பாண்டியன் என்றும் தாமஸ் பாண்டியன் என்றும் பலர் இதே யுக்தியைத் தான் கையாளுகிறார்கள்! ஹிந்து மதம், கடவுளர்கள் மற்றும் மத நம்பிக்கைகளை ‘கலங்காமல்’ உடைத்தெறிய பிரச்சாரம் செய்கிறார்கள். தன் ஹிந்து விரோத பிம்பத்தை மாற்ற கமல்ஹாசன் பரிதாபமாக ஒரு முயற்சி செய்தது நகைப்பை வரவழைத்தது.

இது கிறிஸ்தவத்தின் ஒரு ‘சதி’! சமூகத்தின் ‘மேட்டுக்குடி மக்கள்’, ‘ஜாதித் தலைவர்கள்’ மதமாற்றத்திற்கான ‘வெயிட்டான கேச்’ என்பது மற்றொரு டிசைன்! கோவையில் ஒரு கோயில் பூசாரியை மதம் மாற்றினார்கள். என்னுடைய வீட்டுக்குக் கூட பலமாதங்கள் நடையாய் நடந்தனர்! இதை கண்டுபிடித்து கட் பண்ணிவிடவே எனக்கு பலகாலம் ஆனது! பாஜகவின் கோட்டப் பொறுப்பாளர் ஒருவரை தேனியில் மதம் மாற்றினார்கள். அவர் மதம் மாறியதை வெளியே சொல்லவே பலமாதம் எடுத்துக் கொண்டார். இன்று அவர் ஒரு ‘சுவிசேஷ பிரசங்கி’.

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியின்  மனைவி  யசோதா பென்னை, ‘தொண்டு செய்ய வாருங்கள், உங்களின் உருவில் நாங்கள் அன்னை தெரசாவை பார்க்கிறோம்’ என்று மனதை உருக்கி மதமாற்றம் செய்ய முயற்சித்திருக்கிறார்கள் என்றால் நீங்கள் நம்புவீர்களா?

2015 நவம்பர் மாதம் ‘உஜாலா’ என்ற பத்திரிகையில் பாதர் பீட்டர் பால் என்பவர் யசோதா பென்னுடன் அமர்ந்திருந்த போட்டோ வந்தது! விசாரித்ததில், யசோதா பென், அவர்களின் சூழ்ச்சிக்கு பலியாக மறுத்ததை அப்பத்திரிகை தெரிவித்துள்ளது. ‘வெயிட்டான மனிதர்களை’ மதம் மாற்றுவதன் மூலம் வேகமாக மதம் மாற்றம் நிகழும் என்பது வாட்டிகனில் எடுக்கப்பட்ட முடிவு!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ்ஸில் வேற்று மதத்தவரை நேரில் சந்திக்கும் திட்டம் உண்டாக்கி, அதன் ஒரு படியாக நான் கோவையிலுள்ள மிகப்பெரிய சர்ச்சின் பாதிரியாரை நேரில் சந்தித்து பேசினேன். அவருடைய பேச்சின் பெரும் பகுதி இம்மண்ணுக்கு அந்நியப்பட்டதாகவே இருந்தது. மண்ணோடு இணைந்த சிந்தனையிலிருந்து அவர் வெகுதூரம் விலகிப் போயிருப்பதை காண முடிந்தது. பாஜகவில் கடந்த ஓராண்டுக்கு முன் சேர்ந்த கிறிஸ்தவ பெண் ஒருவர் விரைவில் வெகு உயரத்துக்கு வந்தார். ஜோசப் விஜய் என சினிமா நடிகரை பெயரை குறிப்பிட்டதால் கோபப்பட்டு கட்சிவிட்டு வெளியே சென்றார்.

இந்த நாட்டில், பெயரைப் பார்த்து நாம் ஆதரவோ எதிர்ப்போ தெரிவிப்பதில்லை. பாலிவுட்டின் அத்தனை பெரிய நடிகர்களும், (சல்மான்கான், ஷாருக்கான், ஆமிர்கான்) அனைவரும் முஸ்லிம்களே! கேரளாவின் முக்கிய நடிகர்கள் பிரேம் நசீர், மம்முட்டி முஸ்லிம்களே! தமிழ் முன்னணி நடிகர்களில் கூட பல முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள். நாம் அனைவரையும் சக மனிதனாக மட்டுமே பார்க்கிறோம்! இங்கே ‘நாம்’ என்று குறிப்பிட்டது ஹிந்துக்களையே!

ஆனால் இந்த ஹிந்துப் பெயர்களில் ஒளிந்து கொண்டு, நம்முடைய ஆதரவினால் கோடிகோடியாக காசு சம்பாதிக்கும், முஸ்லிம், கிறிஸ்தவ நடிகர்கள், அரசியல்வாதிகள் அப்பணத்தை நம்மை மதம் மாற்றுவதற்காகவே பயன்படுத்துகிறார்கள். திரைப்படத்தின் மூலம், அரசியல் மூலம், பெரும்புள்ளிகளை, கரும்புள்ளிகளாக ‘கன்வர்ட்’ பண்ணுவதன் மூலம் பாரதத்தில் மதமாற்றம் அலங்காரம் செய்யப்பட்ட மற்றொரு  சதியாக உலாவருகிறது! உஷார்… உஷார்… பாரா உஷார்… என அறிவிக்க இதை எழுதவில்லை! ‘வந்தாரை வாழவைக்கும் ஹிந்துவே’, இதை புரிந்துகொள்ளவில்லையென்றால், அழிந்துபோய்விடுவாய் என எச்சரிப்பதற்காகவே இதை எழுதினேன்.