தமிழன் எனப்படும் ஹிந்து

காவிரிப் பிரச்சினையில், தமிழகத்தில் தங்களை தமிழர் இயக்கத்தினர் என்று கூறிக் கொண்டு செயல்படும் இயக்கங்கள் ஒன்று கூடி, சென்னையில் உள்ள hedkevar-vivegananda அலுவலகத்தை முற்றுகையிட்டார்கள்.  முற்றுகையின் போது, தமிழர்கள் ஹிந்துக்கள் கிடையாது.  ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தமிழகத்தை விட்டே விரட்டுவோம் என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் வைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.   இவ்வாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.

இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஈ.வே. ராமசாமி நாயக்கர் அமைப்பிலிருந்து வெளியேறியவர்கள்.  தி.க.விலிருந்து வெளியேறி தந்தை பெரியார் திராவிடர் கழகம் என்றும், திராவிடர் விடுதலை கழகம் என்றும் இரண்டு அமைப்புகளின் தாய் வீடு தி.க.   தி.க.வின் தலைவர் ராமசாமி நாயக்கர்  கன்னடர்!

தமிழைத் தாய் மொழியாக கொண்டவன் தமிழன் (1.6.1958-ல் குயில் பத்திரிக்கையில்) என பாரதிதாசன் எழுதியுள்ளார்.  இந்த அளவு கோல் கொண்டு விமர்சனத்தை வைத்தால், தி.க.வே ஒரு தமிழின கட்சியாக இருக்க முடியாது.  தமிழ் ஒரு காட்டு மிராண்டி மொழி என வர்ணணை செய்தவரின் கட்சியும் அதிலிருந்து பிரிந்தவர்கள் கட்சியும் எவ்வாறு தமிழ் இனமாக இருக்க முடியும்?

தமிழ் நாடு தாய் நாடு,  தமிழே தாய் மொழி, தமிழர் ஒழுக்கம் தன்தொழுக்கம் என இம் மூவகைப் பேரும் பெற்றவன் தமிழன்  என ஒரு விளக்கம் உள்ளது.  கன்னட மொழி பேசுபவர்கள், தெலுங்கு மொழி பேசுபவர்கள் தங்களை தமிழ் இனத்தவர்களாக காட்டிக்கொள்ளும் வேடிக்கை தமிழகத்தில் தான் நடக்கிறது.

இவர்கள் தமிழனத்தை காப்பதற்கு பதில் மாற்று மொழியை கொச்சைப்படுத்துவதும், அந்நிய நாட்டு மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.  தமிழன் ஹிந்து இ்ல்லை என்று வாதிடும் இந்த பிரகஸ்பதிகள், உருது மொழி பேசும் இஸ்லாமியர்களுடன் கூடி குலாவி வருவதும், ஆங்கில மோகத்திற்கு அடிமையாகியிருப்பதும் வேடிக்கையானது.

ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தின் முன் ஆர்பாட்டம் செய்தவர்கள் கையில் பிரபாகரன் படத்தை வைத்துக் கொண்டு ஆர்பாட்டம் நடத்தினார்கள்.   கையில் வைத்திருந்த பதாகையில், இது பெரியார் மண், இது புலிகளின் மண்,  ஆர்.எஸ்.எஸ்.ஸே வெளியேறு என்பது பொன்ற வாசகங்கள்!

இது பெரியாரின் மண் என்றால், 1954-ல் தமிழகத்திலிருந்து மலையாளிகள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்று கோஷமிட்டு ஆர்பாட்டம் நடத்திய தி.க.வினர், தமிழகத்திலிருந்து மலையாளிகளின் ஆதிக்கத்தை குறைத்து விட்டார்களா என்பது ஆய்வுக்கு உட்பட்டது.  இது போல் வட நாட்டினரை வெளியேற்ற வேண்டும் என பழ. நெடுமாறன் ஆர்பாட்டம் தற்போது நினைவு கூர வேண்டும்.  இவர்களின் ஆர்பாட்டம் என்பது தாங்களும் இருக்கிறோம் என்பதை அவ்வப்போது காட்டுவதற்காகவே!

இவர்களின் ஆர்பாட்டத்தில் தமிழகம் புலிகளின் மண் என்று கூறுவது, பிரபாகரனின் படத்தை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தவே.  2009-ல் ஈழத்தில்  லட்சத்திற்கு அதிகமான தமிழர்களை கொன்று குவித்த போது, இவர்கள் ஆர்பாட்டம் ஒன்றை தவிர வேறு எதுவும் நடத்த வில்லை.  பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தார்களா?  தாய் தந்தையை இழந்த குழந்தைகளுக்கு படிப்பு உதவி செய்ய முன் வந்தார்களா?  தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் படும் துன்பத்தையம், துயரத்தையம் களைய முன் வந்தார்களா?  ஆனால் ஆர்பாட்டம் என வந்து விட்டால், புலிகளின் தலைவர் பிரபாகரன் படத்தை மட்டும் பிடித்துக்கொண்டு வந்து விடுவார்கள்.  இலங்கைத் தமிழ் மக்களுக்கு மறுவாழ்வு அமைத்துக் கொடுத்து வருவது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு என்பதை இருட்டடிப்பு செய்துவிட முடியுமா?

தமிழன் என்று ஒரு இனம் உண்டு, அதற்கு என ஒரு குனம் உண்டு என பாடினார்கள்.  இன்று தமிழன் என்ற இனத்தின் அடையாளம் என்ன என்பது தான் தெரியவில்லை.  திருவள்ளுவர் எடுத்துக் கூறிய குனத்துடன் ஒரு ‘தமிழின’ தலைவராவது இருக்கிறாரா என்பதும் தெரியவில்லை.  பெரியாரின் கோடிக் கணக்கான சொத்துக்களை அடைவதற்கு நடத்தும் போராட்டத்தின் விளைவாக உருவாக்கிய இயக்கமும் உள்ளது.

தமிழனின் கடவுளாக திருமாலையும், முருகனையும் வழிப்பட்டார்கள் என்பது வரலாறு. ஈழத்து தமிழறிஞர் க. சிவத்தம்பி கூறும் போது,  மாயோன் வழிபாடு தமிழ் நாட்டின் பூர்வீக வழிபாடுகளில் ஒன்றாகும் என்றார் (மாயோன் என்பது திருமால்).  மாயோனாகிய பெருமாளும்  சேயோனாகிய முருகனும் தமிழ்க் கடவுளே என்றார்.  மாயோன் மேய காடுகறை உலகமும்,  சேயோன் மேய  மைவரை உலகமும் என்று முதலில் முல்லை நில மாயோனைச் சொல்லி, அப்புறம் தான் குறிஞ்சி நிலச் சேயோனைச் சொல்கிறார் தொல்காப்பியர். குமரகுருபரர் கூறும் பொது, பச்சைத் தமிழன் பின் சென்ற பசுங் கொண்டல் திருமாலே என்றும் கூறுகிறார். ஆகவே ஹிந்துக் கடவுள் வழிபாடு என்பது தமிழர்களின் வரலாறு என்பதை மறந்து விட்டு, அரசியல் காரணங்களுக்காக பிரிவினையை ஏற்படுத்தி குளிர் காயும் இவர்கள் காற்றில் கரைந்து விடுவார்கள்.

விடுதலைப் புலிகளை ஆதரித்து உண்ணாவிரத போராட்டத்தை ஈழத்தில் நடத்தும் போது கூட பிள்ளையார் கோவில் முன்பு நடத்தியதை ஆர்பாட்டக்காரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  பழ.நெடுமாறன் ஒரு கட்டுரையில் கூறும் போது, மட்டக்கிளப்பு மாமாங்கப் பிள்ளையார் கோயில் எதிரில் அன்னையர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டார்கள் என குறிப்பிட்டுள்ளது முக்கிய அம்சமாகும்.   விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு முருக பக்தர் என்பதும், வழிபாட்டில் அதிக அக்கறை கொண்டவர் என்பதும் தெரிந்தும், இந்துக்களை இழிவுப்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுபவர்கள் இன்னும் உலா வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்த மண் பெரியார் மண் என்கிறார்கள்.  கடவுளை கற்பித்தவன் முட்டாள் என்று கூறும் பெரியார் எவ்வாறு தமிழனாக இருப்பார்? முதல் சங்கம் முதல் கடைச் சங்கம் வரை தமிழை வளர்த்தவர்கள் கடவுள் பக்தி கொண்டவர்கள் என்பதை மறந்து விடக் கூடாது.  ஒழுக்கம் என்பது தமிழர்களின் பண்பாடும்,  கலாச்சாரமாகும்.  தொல்காப்பியர் முதல் அகநானூறு, புறநானூறு என சங்க இலக்கியங்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஓழுக்கத்தை வலியுறுத்துகிறது.  இதற்கு மாறாக சேலத்தில் நடத்த மாநாட்டில், ஒருவன் மனைவி மற்றொருவனை விரும்பினால் குற்றமாக கருத கூடாது என தீர்மானத்தை எவ்வாறு நிறைவேற்றினவர்கள் திகவினர்!  ஓழுக்கத்திற்கு மாறாக தீர்மானம் போட்டவர்கள் எவ்வாறு தமிழினத் தலைவராக இருக்க முடியும்?

தனது அமைப்பில் திராவிடம் என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு, தமிழன் என்று பிரச்சாரம் செய்வதும் மோசடிதான். காஷ்மீரில் இனப் படுகொலை நடப்பதாக கூறி இஸ்லாமியர்களுடன் கூடி ஆர்பாட்டம் நடத்திய ‘மே17’ இயக்கத்தினர், எப்போது இஸ்லாமியர்கள் தமிழர்களாக மாறினார்கள் என்பது தெரியவில்லை.  தமிழ் கலாச்சாரத்திற்கு புறம்பான கலாச்சாரத்தை  கொண்டவர்களுடன் கைகோர்த்து கொண்டு ஆர்பாட்டம் நடத்தும் இவர்கள், தமிழன் இந்து கிடையாது என்று சொல்வதற்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது.