தமிழகமே உஷார்!

தமிழகத்தில் செயல்படும் தவ்ஹீத் ஜமாத்தின் பொறுப்பாளர்கள் தங்களுக்கும், இலங்கையில் உள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என அறிக்கை விடுத்துள்ளார்கள். உண்மையில் கடந்த ஐந்தாண்டுகளாக இரண்டு அமைப்புக்கும் தொடர்பு உண்டு என பல ஆவணங்கள் வெளி வந்துள்ளன. 7.11.2015ந் தேதி இணையத்தில் வெளியான ஒரு செய்தி, இலங்கையில் உள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் அழைப்பின் பேரில், தமிழக தவ்ஹீத் ஜமாத்தின்  பொறுப்பாளர்  பி.ஜெய்னுல் அபிதீன் அழைக்கப்பட்டார்.இவரின் வருகைக்கு சில முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். தங்களின் நம்பிக்கைக்கு எதிராகவும், பயங்கரவாதத்தை பிரச்சாரம் செய்ய இருப்பதால், இலங்கையில் பேச அனுமதிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதன்  காரணமாக இலங்கை அரசு அவரை திருப்பி அனுப்பியது.

இலங்கை தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் பொதுச் செயலாளர் ஆர்.அப்துர் ரசாக். உண்மையான இஸ்லாத்தைக் கடைபிடிப்பதற்கும், இஸ்லாத்தின் மீது நம்பிக்கையற்றவர்களை களையெடுப்பதிலும், தமிழக தவ்ஹீத் ஜமாத்தும், நாங்களும் இணைந்து செயலாற்றுகிறோம் என்றார்.  தமிழக தவ்ஹீத் ஜமாத் சில வருடங்களுக்கு முன் திருச்சியில் நடத்திய ஷிர்க் மாநாட்டில், புத்தர் சிலைகளை உடைத்த தாலிபான்களுக்கும், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினருக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளார்கள். சிலை வழிபாடு கூடாது என்பதற்காகவே கூட்டப்பட்ட. இந்த மாநாட்டில் தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

One thought on “தமிழகமே உஷார்!

  1. இந்தியா மற்றும் இந்துக்கள் நிலை இன்றைய நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த நிலை அயல்நாடுவாழ் இந்துக்களுக்கு என்றால் ஏற்றுக்கொள்ளலாம். நமது இந்திய அரசு அவர்களை பாதுகாக்க வேண்டும் என்று நாம் வலியுறுத்தலாம் ஏனெனில் அங்கு பெரும்பான்மையாய் வாழ்பவர்கள் மாற்று மதத்தவர்கள். நமது இந்து மதம் போதித்த நல்வழி மற்றும் சகிப்புத்தன்மை அவர்களுக்கு அவர்களது மதத்தினால் போதிக்கப்படவில்லை.

    ஆனால் இன்று நரேந்திர மோடி அவர்கள் ஆட்சியில் ஆங்கிலேயர் மற்றும் முகலாயர்களால் விதைக்கப்பட்ட விஷ விதைகள் இன்று மதச்சார்பின்மை, கல்வி நிறுவனங்கள், மற்றும் மருத்துவ மனைகள் என்ற பெயரில் விளைந்து நிற்பதும் அவர்கள் மதமாற்ற மற்றும் நமது பெருமைமிக்க கலாச்சார வரலாற்றை திரித்து பதியவைக்கும் வேலையில் ஈடுபட்டு இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    இதற்கு எதிராக போராட அவர்களை வீழ்த்த வேண்டும்.

    இது மகாபாரத போர் போல்தான்.
    மிரட்டலால், பணத்தால், சூழ்ச்சியால், வெகுளிதனத்தால் ஜாதி என்ற பெயரில் நமது முன்னோர் செய்த தவறால்
    மதம் மாற்றப்பட்ட நமது உறவுகளை எதிர்த்து செயல்பட வேண்டி உள்ளது.

    கிருஷ்ணன் இறுதி நிமிடம் வரை சமாதானத்திற்கு முயன்றது போல்
    நாமும் நமது உறவுகளுக்கு உண்மையை உணர்த்தி அவர்கள் தாய் மதம் திரும்ப செய்ய வேண்டும்.

    அதைப்போல நடைபெறும் மதமாற்ற முயற்சிகளையும் நாம் இணைந்து எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்.

    நர, நாராயணர்களை போல் இந்துக்களும், இந்துமதமும் வெற்றி பெறவே தோன்றியவர்கள் என்பதை வரும் காலம் வரலாற்றில் உணர்ந்து சொல்லட்டும்.

Comments are closed.