தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம்

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்த காவல்துறை அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 16) அன்று தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தப்பட உள்ளது. அணிவகுப்பு ஊர்வலம் நடைபெறும் அனைத்து மாவட்டங்களிலும் பலத்த பாதுகாப்பு வழங்க அந்தந்த மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.