சேவாபாரதிக்கு 18 சென்ட் நிலம்

கேரள மாநிலம் திருச்சூர் குன்னங்குலம் சோவ்வூரைச் சார்ந்தவர் 75 வயதான சேரு அப்பப்பன். அவர், தனது 18 சென்ட் நிலத்தை சேவாபாரதி அமைப்புக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். செரு அப்பப்பன், தனது மகன் வர்கீஸ் உடன் இணைந்து, முறையான பத்திரப் பதிவுகளை செய்து முடித்து அதன் சான்றிதழ்களை உள்ளூர் பஞ்சாயத்து உறுப்பினர் அஜீத் விஷால் (பா.ஜ.க.) வசம் வழங்கினார். உள்ளூர் மக்களுக்குப் பயன்படும் வகையில் மருத்துவம் மற்ற உதவிகளுக்காக, சேவா கேந்திரம் ஒன்றை அங்கு கட்டுவதற்காக அவர் அந்த இடத்தைத் வழங்கியுள்ளார். விரைவில் அங்கு கட்டடம் கட்டப்பட திட்டமிடப்பட்டுள்ளது. சேவைப் பணிக்காக நிலத்தைத் தானமாக வழங்கிய சேரு அப்பப்பன் செயல் பாராட்டுக்குரியது.