சூரசம்ஹாரம்: அக்டோபர் 25, 2017 : சிக்கல் தீர சிங்கார வேலன்!

கந்த சஷ்டி விரதத்தின் 6வது நாள் (இந்த வருடம் அக்டோபர்

25-ம் தேதி) சூர சம்ஹாரம் நடைபெறுகிறது. முருகப் பெருமான் சூரனை வதம் செய்வதற்காக தனது அன்னை பார்வதி தேவியிடம் வேல் வாங்கிய திருத்தலத்தின் பெயர் சிக்கல்.

இந்த ஊர் நாகப்பட்டினத்தில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்கு இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள அம்மனுக்கு வேல் நெடுங்கண்ணி என்று பெயர். இது அம்மனின் 64 சக்தி பீடங்களில் ஒன்று.

கந்த சஷ்டி திருநாளின் முதல் நாள் முருகன் இத்தல

வேல் நெடுங்கண்ணி அம்மனிடமிருந்து வேல் வாங்கியதாக கூறப்படுகிறது. சூரபத்மனை வீழ்த்துவதற்காக அன்னையிடம் வேல் வாங்கும் இந்நிகழ்ச்சி நடைபெறுகின்ற அன்று, வேலின் சக்தியால் முருகனின் திருவுருவச் சிலை வியர்க்கிறது.

பட்டுத் துணியால் துடைக்கத் துடைக்க முத்து முத்தாக வியர்வை துளிர்த்துக் கொண்டேயிருக்கும் அற்புதத்தை இன்றும் காணமுடியும்.

சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் (திருச்செந்தூர்) சம்ஹாரம்” என்பது பழமொழி.

சிக்கல் சென்று வந்தால் நமது குடும்பச் சிக்கல்கள் தீர்ந்து விடும் என்பது ஐதீகம்.