சாரதா தேவி கோயிலுக்கு சென்று வர பாதை

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சாரதா பீட கோயிலுக்கு காஷ்மீரி பண்டிட்டுகள் உட்பட பாரதத்தில் வசிக்கும் ஹிந்துக்கள் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். இதற்காக, இரு நாடுகளுக்கு இடையே கர்தார்பூர் சிறப்பு வழித்தடம் கட்டப்பட்டுள்ள அதே வழியில், சாரதா பீட சிறப்பு வழித்தடம் அமைக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சட்டப் பேரவை உறுப்பினர்கள், இந்த செயல்பாட்டுக்கு தங்களது ஆதரவை அளித்துள்ளனர். இந்த முடிவை காஷ்மீர் பண்டிட் சமூகம் வரவேற்றுள்ளது. 2004ம் ஆண்டு முதல் இந்த வழித்தடத்தை திறக்க காஷ்மீர் சாரதா கமிட்டி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சட்டசபையில் சாரதா வழித்தடத்தை திறப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று எங்களுக்குத் தெரிய வந்தது. அதை வரவேற்கிறோம். சிவில் சமூகம் பாராட்டப்பட வேண்டும். நாங்கள் சமீபத்தில் இந்தப் பக்கத்தில் தீட்வாலில் ஒரு சாரதா தேவி கோயிலை திறந்துள்ளோம். அதை மத்திய உள்துறை அமைச்சர் திறந்து வைத்தார். சிவில் சமூகத்திற்கு என்று ஒரு பங்கு உள்ளது. மேலும் இது கர்தார்பூரைப் போலவே திறக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இது ஒரு சிறந்த நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கையாக இருக்கும்” என்று சேவ் சாரதா கமிட்டியின் தலைவரும் நிறுவனருமான ரவீந்திர பண்டிதா கூறினார்.

சமீபத்தில், குப்வாரா மாவட்டத்தில் உள்ள தீட்வால் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே சாரதா மாதா கோயில் திறக்கப்பட்டது. இதனை திறந்துவைத்த அமித் ஷா, கர்தார்பூர் வழித்தடத்தின் பாணியில், சாரதா பீடத்தை திறக்க மத்திய அரசு முயற்சிக்கும் என்று கூறியிருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது. இருப்பினும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சட்டப் பேரவையின் இந்த முடிவை, பாகிஸ்தான் அரசு இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களுக்கும் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாரதத்துக்கான பாகிஸ்தான் முன்னாள் தூதர் அப்துல் பாசித், “காஷ்மீரி பண்டிட்டுகளுக்கு சாரதா பீடத்திற்கு முக்கியத்துவம் உண்டு, கர்தார்பூர் வழியில் சாரதா பீட நடைபாதையை திறக்க வேண்டும் என்று சட்டசபை உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றினர். இது காஷ்மீர் தலைவரிடமிருந்து வந்தது. கர்தார்பூர் தாழ்வாரம் ஒரு சர்வதேச எல்லை. ஆனால், இப்பகுதி சர்வதேச எல்லை அல்ல. இந்தக் கட்டுப்பாட்டுக் கோடு இருக்கக் கூடாது என்று நாங்கள் எப்போதும் விரும்புகிறோம்” என தெரிவித்துள்ளார். எனினும், காஷ்மீர் பண்டிட் சமூகம் இரு நாடுகளும் அரசியலுக்கு அப்பாற்பட்டு இதில் செயல்படும் என்றும் பக்தர்களுக்கு நடைபாதையை திறப்பது உறுதி செய்யப்படும் என்றும் நம்புகிறது.