சாதுக்கள் மீது வீசப்பட்ட இறைச்சி

உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத்தில் உள்ள இத்கா சாலையில், ஹரித்வாரின் ஜூனா அகாராவைச் சேர்ந்த பாபா கபில் கிரி மற்றும் மான்ஷா கிரி ஆகிய இரண்டு சாதுக்கள் ரிக்ஷாவில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த​​ சில முஸ்லிம் இளைஞர்கள், ‘இது புல்டோசர் பாபா’ என கூறிக்கொண்டே தாங்கள் சாப்பிட்டு மீதமுள்ள இறைச்சி, ரொட்டித் துண்டுகள், எலும்புகள் ஆகியவற்றை சாதுக்கள் மீது வீசினர். இதுகுறித்து கேட்டபோது அவர்கள் சாதுக்களை துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கினர். இதையடுத்து சாதுக்கள் மாற்றுப்பாதையில் சென்றனர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் குற்றவாளிகளில் ஒருவரான நுஸ்ரத் என்பவரை கைது செய்தனர். ஆனால், அவன் மனநலம் பாதிக்கப்பட்டவன் என கூறியுல்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள மீதமுள்ள குர்றவாளிகளை தேடிவருவதாகவும் கூறியுள்ளனர்.