சரியான நடவடிக்கையே

2,000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப்பெறும் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை மிகச் சரியான ஒன்றே. அதன் பயன்பாடு குறைந்துள்ளதால் அவைகள் பெரும்பாலும் பதுக்கி வைப்பதற்காகவே பயன்படுகிறது என்று மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் அதற்கான 6 காரணங்களை அவர் பதிவிட்டுள்ளார். அதில்,

  1. பெரும்பாலான வரி ஏய்ப்பு சோதனைகளில் ரூ. 2,000 நோட்டுக்களே கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. விதி 80:20ன் படி, 80 சதவீத மக்கள் ரூ. 2,000 பண நோட்டுக்களை சட்டபூர்வமாக சேமித்து வைத்திருந்தாலும், அவர்கள் அதன் மொத்த மதிப்பில் 20 சதவீதத்தை மட்டுமே சேமித்து வைத்திருக்கிறார்கள். ஆனால், ரூ. 2,000 நோட்டுகளை வைத்திருப்பவர்களில் 20 சதவீதம் பேர் அதன் மொத்த மதிப்பில் 80 சதவீதத்தை (சுமார் 3 லட்சம் கோடி) பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

  1. ரூ. 2,000 நோட்டுகள் பொருளாதார நடவடிக்கைகளுக்கு பெரும்பாலும் பயன்படுத்தப்படவில்லை என்பதால், இதனால் சாமானிய மக்களுக்கு பெரிய பாதிப்புகள் இருக்காது.

  1. நாட்டில் தற்போது டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் அதிகரித்திருப்பதன் காரணமாக நேரடிப் பணங்களின் பயன்பாடுகள், குறிப்பாக 2,000 ரூபாய் நோட்டுக்களின் பயன்பாடும் புழக்கமும் மிகவும் குறைந்து விட்டது.

  1. இனி ரூ. 500 நோட்டுகளும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளும் ரூ. 2,000 நோட்டுகளுக்கு மாற்றாக அமையலாம்.

வரும் 2026ம் ஆண்டுக்குள் தற்போதுள்ள நிலையில் இருந்து டிஜிட்டல் பணப் பரிமாற்றம் மூன்று மடங்கு அதிகரிக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் பணப் பரிமாற்றத்திற்கான ரூ. 2000 நோட்டுக்களின் தேவை மிகவும் குறைந்து விடும்.

  1. அனைத்திலும் முக்கியமாக, சட்டப்பூர்வமான பணப் பரிமாற்றத்திற்கு ரூ. 2000 பயன்படுத்தலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதால் (செப்டம்பர் 30க்கு பின்னரும் பயன்படுத்த முடியுமா என்பதை ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்த வேண்டும் என்பது தற்போதைய எனது புரிதல்) நியாயமாக பரிமாற்றம் மேற்கொள்பவர்கள் அவற்றை மாற்றிக்கொள்ள முடியும். என தெரிவித்துள்ளார். கடந்த 2018 முதல் 2021ம் ஆண்டு வரை மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்தவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் என்பது குறிப்பிடத்தக்கது.