கோயில் ஆக்கிரமிப்பு

தேனி மாவட்டம், சீப்பாலக்கோட்டையில் காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலை சில தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆக்கிரமிப்புகளில் இருந்து அக்கோயிலை விடுவிக்க வேண்டுமென்று ஊர் மக்கள் ஒன்றிணைந்து இந்து முன்னணி அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் முருகானந்தத்திடம் மனு அளித்துள்ளனர்.