கொரோனா தடுப்பு மருந்து

சென்னை கீழ்பாக்கம் பொது மருத்துவமனையில் கொரோனா தடுப்பு மருந்தை, 94 வயதான முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரான மருத்துவர் எச்.வி ஹண்டே போட்டுக்கொண்டார். அவர் அது குறித்து கூறுகையில், “தடுப்பூசியின் முக்கியத்துவம் எனக்குத் தெரியும். தடுப்பூசியால் எனக்கு எந்த பக்க விளைவுகளும் இல்லை. நமது அரசு பரிந்துரைத்த எந்த தடுப்பூசியும் நான் எடுக்க தயங்க மாட்டேன். நமது விஞ்ஞானிகள் சிறப்பாக பணி செய்துள்ளனர். அவர்களை நான் நம்புகிறேன். எனவே, தடுப்பூசி போடுவது உங்கள் முறை என்றால், தயங்க வேண்டாம்” என கேட்டுக்கொண்டார்.