கிருஷ்ணகிரியில் மின் வாகன தயாரிப்பு

பாரத் ஆல்ட் ப்யூல் நிறுவனம் இருசக்கர மின்சார வாகன தயாரிப்பு தொழிற்சாலையை ரூ. 250 கோடி முதலீட்டில் கிருஷ்ணகிரியில் அமைக்க உள்ளது. இதற்காக அந்த நிறுவனம் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. சுமார் 40 ஆயிரம் சதுர மீட்டர்கள் பரப்பளவில் ஆண்டுக்கு 1 லட்சம் இருசக்கர மின் வாகனங்களைத் தயாரிக்கும் வகையில் இந்த ஆலை அமைக்கப்படும். மின்சார இஉற்பத்தித் துவங்கும். சுமார் 3,000 பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.  இருசக்கர மின் வாகனத்தின் விலை ரூ. 85,000 முதல் ரூ.1 லட்சம் வரையில் இருக்கும். தெற்காசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளது’ என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே கிருஷ்ணகிரியில் ஓலா நிறுவனம் அதன் மின்சார இருசக்கர வாகன தயாரிப்பு ஆலையை அமைத்துள்ள நிலையில், பாரத் ஆல்ட் ப்யூல் நிறுவனமும் கிருஷ்ணகிரியைத் தேர்ந்தெடுத்துள்ளதால் தமிழகத்தின் மின்சார இருசக்கர வாகன தயாரிப்பு மையமாக கிருஷ்ணகிரி உருவெடுத்து வருகிறது.