கடற்படையின் முதல் பெண் விமானி

இந்தியக் கடற்படையின் முதல் பெண் விமானியாக, சப் – லெப்டினென்ட் ஷிவாங்கி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியக் கடற்படை தினம், நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், சப் – லெப்டினென்ட் ஷிவாங்கி, இந்தியக் கடற்படையின் முதல் பெண் விமானியாக நியமிக்கப்பட்டுள்ளார். பீஹார் மாநிலம், முசாபராபாதில் பிறந்த இவருடைய தந்தை, பள்ளி முதல்வராக உள்ளார். கடற்படையில் இணைந்த ஷிவாங்கி, தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் அருகே உள்ள இந்திய விமானப்படை அகாடமியில், இந்தாண்டு ஜூனில் பயிற்சிக்காக சேர்க்கப்பட்டார். தீவிரப் பயிற்சிக்குப் பிறகு, தற்போது விமானியாக, கடற்படையில் இணைந்துள்ளார். கேரள மாநிலம், கொச்சியில் உள்ள கடற்படை தளத்தில் இவர் பணியாற்றுவார்.