ஒரு லட்சம், ஒரே லட்சியம்!

அன்புடையீர் வணக்கம்.

* வாசகர்கள், விளம்பரதாரர்கள் அனைவருக்கும் ‘ஹே விளம்பி’ புத்தாண்டு வாழ்த்துக்கள்.

* கடந்த ஆண்டு மார்ச் மாதம் சந்தா செலுத்திய 3,000 அன்பர்களுக்கு தற்போது சந்தா முடிகிறது. அவர்கள் சந்தாவை புதுப்பிக்க வேண்டுகிறோம். ஆண்டு சந்தா ரூ.500/-க்கு VIJAYABHARATHAM பெயரில் காசோலை அனுப்பலாம். அல்லது அலுவலகத்திற்கு போன் செய்தால் VPP மூலமாக அனுப்பி வைக்கிறோம். தபால்காரரிடம் ரூ.525/- செலுத்தினால் போதுமானது.

* ‘விஜயபாரதம்’ என்பது ஒரு பத்திரிகை மட்டுமல்ல. இது ஓர் இயக்கம். ஒவ்வொரு ஹிந்துவின்  உள்ளத்திலும் நமது பண்பாட்டை, கலாச்சாரத்தை பேணிப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் பத்திரிகை. எங்கள் அலுவலகத்தில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளிக்கு ஆயுதபூஜை பிரசாதம் கொடுத்தால், ‘நான் கிறிஸ்தவன். எனவே பிரசாதம் வேண்டாம்’ என்று பணிவோடு வாங்க மறுத்துவிட்டார். ஒரு சாதாரண கிறிஸ்தவருக்கு அவர் மதத்தில் தீவிரப் பற்று இருக்கிறது. இதை பாராட்டத்தான் வேண்டும். அந்த தீவிர உணர்வு நமக்கு வேண்டாமா? எம்மதமும் சம்மதம் என்பது மட்டும்  போதாது. எங்களுக்கு ஹிந்து மதம் மட்டுமே சம்மதம் என்ற பெருமித உணர்வு நமக்கு வேண்டும். நீங்கள் விஜயபாரதம் சந்தாதாரர் தானே… உங்கள் நண்பர்கள், உறவினர்கள் ஒருவரையாவது புதியதாக விஜயபாரதம் சந்தாதாரர் ஆக சேர்த்துத் தரும்படி பணிவோடு வேண்டுகிறேன்.

* விஜயபாரதம் தமிழகத்தில் குடும்பங்களுக்கு செல்லவேண்டும். அந்த இலக்கை அடைய உங்களின் அன்பான ஆதரவை வேண்டுகிறேன்.