ஒன்பது தோட்டாக்கள் ஒன்றும் செய்ய முடியவில்லை

படத்தில் உள்ள CRPF அதிரடிப்படை கமாண்டன்ட் போன வருஷம் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் போரிட்டதில் 9 தோட்டாக்கள் பாய்ந்து சரிந்தவர். ஒரு ஆண்டு காலம் சிகிச்சை எடுத்துக்கொண்டு போன வாரம் மறுபடியும் பணியில் இணைந்தார். தன்னை ஜம்மு காஷ்மீருக்கே அனுப்பும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் இன்னும் அவர் உடல் தேறவேண்டி இருப்பதால் தலைமையகத்திலேயே பணி அளிக்கப்பட்டிருக்கிறார். இந்த மாவீரர் பெயர் சேத்தன் சீட்டா.