ஐயப்ப சேவா சமாஜம் கண்டனம்

சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் தேசிய பொதுச் செயலர் ராஜன் வெளியிட்ட அறிக்கையில், “சென்னையில், சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் சார்பில், ஹரிவராசனம் நுாற்றாண்டு விழா குழு அறிவிப்புக் கூட்டம் கடந்த 11ம் தேதி நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய ஆளுநர் ரவி, ‘சனாதனம்’ என குறிப்பிட்டதை கண்டித்து சிலர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், அவர்களின் அறியாமை புலப்படுகிறது. இக்கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் என்ற முறையில், அவர்களின் கண்டனத்தை சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் எதிர்க்கிறது’ என தெரிவித்துள்ளதுடன் அதற்கான காரணங்களையும் பட்டியலிட்டுள்ளார்.