ஏ.பி.வி.பி முற்றுகைப் போராட்டம்

தெலுங்கானாவில் அஸ்ரி சுல்தான் என்ற முஸ்லிம் பெண்ணை மணந்த ஹிந்துவான நாகராஜு என்பவரை அஸ்ரி சுல்தானின் சகோதரர் செய்யது மொபின் அகமதுவும் அவரது சக நண்பர்களும் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்தனர். காவல்துறையினர் செய்யது மொபின் அகமதுவை கைது செய்தனர். நாகராஜு கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவரது குடும்பத்திற்கு விரைந்து நியாயம் வழங்கக் கோரியும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) அமைப்பினர் நேற்று குகட்பல்லி பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தெலுங்கானா காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தி உள்ளூர் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.