ஏ.பி.ஜி.பி பொன்விழா ஆண்டு

அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து (ஏ.பி.ஜி.பி) அமைப்பு, 1974ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தின் பொன்விழா ஆண்டு, இந்த 2023 செப்டம்பர் முதல் 2024 செப்டம்பர் வரை கொண்டாடப்படுகிறது. இதன் துவக்க நிகழ்ச்சி வரும் செப்டம்பர் மாதம் 8,9,10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நிகழ்ச்சி நடைபெறுகிறது இதில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில பாரத தலைவர் டாக்டர் மோகன் பாகவத் கலந்து கொள்கிறார். மேலும் ஏ.பி.ஜி.பி அமைப்பின் அகில பாரத பொறுப்பாளர்கள், மாநில பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்டோரும் இதில் கலந்து கொள்கிறார்கள். இந்த ஸ்வர்ண ஜெயந்தியை முன்னிட்டு, 2023 செப்டம்பர் மாதம் துவங்கி வருடம் முழுவதும் மாநில மற்றும் மாவட்ட அளவில் பல்வேறு பொது நிகழ்ச்சிகள் நடத்த தமிழக மாநிலல் குழு தீர்மானம் செய்துள்ளது.