எதிர்த்து பேசினால்

விவசாய போராட்டத்தில் காலிஸ்தானி பயங்கர வாதிகள், முஸ்லிம் பயங்கரவாதிகள், நக்ஸலைட்டுகள் கைகோர்த்துள்ளனர். அவர்கள் இந்த பிரச்சனையை மற்றொரு சி.ஏ.ஏ வன்முறையாக மாற்ற முயற்சிக்கின்றனர் என்பது அவர்களின் கோஷங்கள், கொடிகள், செயல்பாடுகள் வாயிலாக நன்றாகவே தெரிகின்றன. ‘இந்திராகாந்தியை கொன்ற எங்களால் மோடியையும் கொல்ல முடியும்’ என தேசத்தின் பிரதமரையே மிரட்ட துணிந்துள்ளனர் இவர்கள். தன் சமூக வலைதளத்தில் இது குறித்து அதிருப்தி தெரிவித்தார் உத்தரபிரதேசத்தில் உள்ள அகாலி என்ற பள்ளியின் துணைத்தலைமை ஆசிரியர் விஜய்பால் சிங். இதனை அடுத்து அந்த பள்ளி நிர்வாகம் அவரை கடுமையாக அடித்து துன்புறுத்தி மன்னிப்பு கேட்க வைத்துள்ளது. அவரின் வேலையும் பறிக்கப்பட்டது. அவருக்கு காலிஸ்தானி ஆதரவாளர்களால் கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது.