ஆலய நிலங்களில் குடியிருப்போர்களுக்கு பட்டா அறிவிப்பின் பின்னனியில் உள்ள சதித்திட்டம்

தமிழக  அரசின் கோயில் நிலங்களில் 5  ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்பவர்களுக்கு பட்டா  வழங்கப்படும்  என்ற அறிவிப்பின் பின்னணியில் சாதாரண பொதுமக்கள் நலன் என்ற பெயரில் பல அரசியல்வாதிகள் தாங்கள் ஆக்கிரமித்துள்ள நிலங்களை தனக்கு வேண்டிய ஆட்சி நடக்கும்போதே சட்டப்படி தனக்குடமை ஆக்கிக்கொள்ளும் எண்ணம்   உள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது . எதற்கு முன்பாக எத்தனையோ கோயில் நிலங்களை  பேருந்து நிலையம் மருத்துவமனை நூலகம்   பேருந்து நிலையம் மருத்துவமனை நூலகம்  கரணம்காட்டி  கல்லூரிகட்ட  பள்ளிக்கூடம் கட்ட  என்ற பெயரில் ஒதுக்கிய போது அமைதியாக இருந்த மக்களை நீ இருக்கும் இடம் உனக்கேதான் என்ற பெயரில் பெரிய அளவில் கோயிலின் நிலங்களை ஆட்டயப் போடுகின்ற படுபயங்கரமான சதித் திட்டம் இருப்பதாக சந்தேகிக்கிறோம் .ஏற்கனவே பலமுறை   பெரிய அளவில் 99 வருட குத்தகை பெற்றுள்ள நிலங்களை அப்படியே சிறுபான்மை கிறிஸ்தவ அமைப்புகளுக்கு ஒட்டுமொத்தமாய் தரை வர்க்க எடுக்கப்பட்ட முடிவோ என்று அஞ்ச தோன்றுகிறது . ஏனெனில் சென்னையிலுள்ள லயோலா மற்றும் பல கல்லூரிகளின் நிலங்கள் குத்தகைக்கான லீஸ் முடிந்து மீண்டும் புதுப்பிக்காமல் உள்ளது என்று பேசிக்கொள்கிறார்கள். இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும் போது இந்த அறிவிப்பின் பின்னணியில் மிகப்பெரிய அளவில் அபகரிக்கும் நோக்கு  அப்பட்டமாக  தெரிகிறது.

சென்னை எழும்பூரில் உள்ள கோயிலுக்கு சொந்தமான நிலத்தை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு விற்பனை செய்ய ஆட்சேபனை  தெரிவிப்பவர்கள் தெரிவிக்கலாம் என்று சென்ற மாதம் பத்திரிகைகளில் விளம்பரமாக வந்தது பக்தர்களின் சார்பில் பலர் ஆட்செபணை  செய்தபோதும் நிர்வாக அதிகாரி அதனை பொருட்படுத்த வில்லை கரணம்  அந்த நிலம் மூன்று வருடங்களுக்கு  முன்பே வழங்கப்பட்டு கட்டிடம் கட்டி ரயில் ஓடிக்கொண்டிருக்கிறது அப்போது கொடுத்துவிட்டு சும்மா கண்துடைப்புக்காக ஒரு கருத்து கேட்பு கூட்டத்தை நடத்துகின்ற அறநிலையத்துறை அதிகாரியை என்னவென்று சொல்வது இவர்களுக்கு மண்டையில் மூளையை கடவுள் கொடுத்தானா  அல்லது எதையுமே இப்படித்தான் செய்வார்களா   ஒரு சாம்பிள் மட்டுமே . ஏற்கனவே கபாலீஸ்வரர்கோயில் நிலத்தை தனிப்பட்ட கபாலி  நபரின் மூலம் தனியாருக்கு  தாரைவார்க்க  பட்டுள்ளது .  பார்த்தசாரதி  கோயிலுக்கு சொந்தமான நிலமும் பார்த்தசாரதி  மூலம் வேறுநபர்களுக்கு பட்டா  போட்டு கொடுக்கப்பட்டுள்ளது .  ஆளும்கட்சியினரின் அராஜக போக்கால்தான் மைனர் சொத்துக்களான கோயில் சொத்துக்கள் முறைகேடான முறையில் விற்கப்பட்டு வந்துள்ளது தற்போது அதனை அரசின் ஆணை   மூலமாகவே நிறைவேற்றிக்கொள்ள துடிக்கிறார்கள்

  நல்ல வேளையாக திருவண்ணாமலையை  சேர்ந்த தியாகராஜன் கோர்ட்டில் வழக்கை  தொடர்ந்தார்   கோயில் நிலங்கள்   கொள்ளை அடிக்கப்படாமல்  காப்பாற்றப்பட்டது. ஆலய   நிலங்கள்   எவ்வளவு   நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது என்று கணக்கிடப்பட்டுள்ளதா   கணக்கெடுப்பும் இல்லாமல் பொத்தாம் பொதுவாக ஆக்கிரமிப்பாளர்களுக்கு என்று அரசனை வெளியிடுவதில் உள்நோக்கம் இருப்பதாகவே  கருத இடமளிக்கிறது. எனவே முதலில் ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களின் பட்டியலை  அவற்றின் குத்தகை  எவ்வளவு அதனை  வசூலிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கோர்ட்டில்  உத்தரவிட்டு  அரசின் மனு  மீதான  தீர்ப்பை ஒத்திவைத்தது .

One thought on “ஆலய நிலங்களில் குடியிருப்போர்களுக்கு பட்டா அறிவிப்பின் பின்னனியில் உள்ள சதித்திட்டம்

Comments are closed.