ஆற்காடு முதலியார் சகோதரர்களை பாராட்டி மோடி புகழாரம்

தீபாவளி அன்று பிரதமர் மோடி மான் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றினார் அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆற்காடு முதலியார் சகோதர்களை பாராட்டியுள்ளார்

இந்தியா பாகிஸ்தான் என்று இருநாடுகள் பிரிந்த காலத்தில் பாக்கிஸ்தான் லட்சத்தீவை கைப்பற்ற முனைப்பு காட்டியது. இதனை அறிந்து கொண்ட அப்பொதைய (முதல்) உள்துரை அமைச்சர் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் உடனடியாக அவரது நண்பர்களான தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆற்காடு முதலியார் சகோதரர்களுக்கு ஒரு செய்தி அனுப்பினார்.
அந்த செய்தியானது லட்சத்தீவை பாகிஸ்தான் கைப்பற்ற பல திட்டங்கள் வகுத்து கொண்டிருக்கிறது. எனவே நீங்கள் விரைந்து லட்சத்தீவுக்கு சென்று நமது தேசியக் கொடியான மூவர்ணக் கொடியை அங்கே ஏற்றி அதற்கு மரியாதை செலுத்தி நீங்கள் வாருங்கள் என்று செய்தி அனுப்பினார். இந்த செய்தி கேட்டு அறிந்த ஆற்காடு முதலியார் சகோதரர்கள் உடனே லட்சத்தீவுக்கு சென்று நமது தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தி விட்டு திரும்பினார்கள். அங்கு சென்று பார்த்த பாகிஸ்தானுக்கு இது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் அந்தத் திட்டம் சுக்கு நூறானது.
இதனைப் பாராட்டி மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்