ஆர்எஸ்எஸ் பிரமுகர் குடும்பத்தோடு கொலை – மம்தா அரசுக்கு கண்டனம்

மேற்கு வங்கத்தில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் குடும்பத்தோடு கொல்லப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை 24 மணிநேரத்தில் கைது செய்ய வில்லையெனில் போரட்டத்தில் இறங்கப்போவதாக அந்த பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து உயிரிழந்தவர் குடும்பத்தின் பகுதியில் வசிக்கும் ஒருவரான மனோஜ் சர்க்கார் ஏஎன்ஐயிடம்,
அவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு 72 மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது, ஆனால் இன்னும் குற்றவாளிகள் காவல்துறையினரால் கைது செய்யப்படவில்லை. அடுத்த 24 மணி நேரத்தில், காவல்துறையினர் அவர்களைக் கைது செய்யாவிட்டால், நாங்கள் ஒரு போராட்டத்தைத் தொடங்குவோம் ”

இறந்த குடும்பத்தின் அண்டை வீட்டாரான சர்க்கார், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கோரினார்.

கொடூரமான சம்பவத்தைத் தொடர்ந்து, தேசிய மகளிர் ஆணையம் மாநில அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்களும் மம்தா அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.