ஆந்திராவில் தமிழ் புத்தாண்டு விழா

ஆந்திர மாநிலம் நெல்லூர் நகரில் வசிக்கும் ஆர்.எஸ்.எஸ் அன்பர்கள் தமிழ் புத்தாண்டு விழா கொண்டாடினார்கள். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்னையைச் சேர்ந்த ராதாபாபுவும், ஆர்.எஸ்.எஸ் ஆந்திர மாநில செய்தி தொடர்பாளர் பையாவாசுவும் சிறப்புரையாற்றினார்கள். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தமிழகம், புதுச்சேரி. கேரளா மக்கள் தொடர்புச் செயலாளர் பிரகாஷ், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆந்திர மாநில தலைவர் நாகரெட்டி ஹரிகுமார், மாவட்ட தலைவர் பாலு சுப்பாராவ் ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் 200 குடும்பங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.