அழிவு சக்திகளின் அரிதாரம் கலைகிறது

விஜயபாரதம் குழாமிற்கு நன்கு அறிமுகமான ரங்கநாதன், புத்தக பதிப்பாளர். சமீபத்தில் மிக அமைதியாக நாட்டிற்கு ஒரு நல்ல பணியைச் செய்திருக்கிறார். அது என்ன தெரியுமா? கடந்த ஒரு வருடமாக, தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி ஒவ்வொரு முறை பயணம் வரும்போதும் சுட்டுரையில் (ட்விட்டர்) “Go back Modi” என்ற ஹாஷ்டாக் பெரும் எதிர்ப்புக் குரலைக் கிளப்பிக் கொண்டிருப்பது வாடிக்கை-, பாஷன் ஆகிவிட்டதல்லவா? அவருக்கு இதில் ஏதோ பித்தலாட்டம் நடக்கிறது என்று அவருடைய தொழில் அனுபவம் சார்ந்த உள்ளுணர்வு சொல்லியிருக்கிறது. அதனைத் தொடர்ந்து அவர் “கட்டுரையில் ட்விட்டரில் மோடி எதிர்ப்பு பதிவுகளில் 58 % பாகிஸ்தானிலிருந்து வருகின்றன.- அதுவும் உருதுமொழியில். தமிழ்நாட்டிலிருந்து வருபவை வெறும் 4% தான்.” என்று கண்டுபிடித்தார். எப்படி இருக்கிறது பாருங்கள் தேசத் துரோகிங்களின் சதியாட்டம் !!

விஜயபாரதம் சார்பில் அவரைப் பாராட்டி அவருடன் உரையாடுபவர் எம்.ஆர். ஜம்புநாதன். பேட்டியிலிருந்து சில பகுதிகள்:

உங்களுக்கு இந்த அருமையான எண்ணம் எப்படித் தோன்றியது?

2010ம் ஆண்டு நான் ட்விட்டரில் சேர்ந்ததில் இருந்தே  ட்விட்டர் புரொபைல் எனப்படும் சுய விவரங்கள், அதில் பிரபலமாக உள்ள ஹேஷ்டாக், எவ்வளவு பேரை அது சென்றடைகிறது, யாரை எல்லாம் அது சென்றடைகிறது என நாங்கள் (ஒத்த கருத்துடைய நண்பர்களும் நானும்) பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டோம்.

சமீப காலங்களில், அதுவும் கடந்த ஒரு வருடமாக மோடிக்கு எதிர்ப்பான சூழல் தமிழ் நாட்டில் இருப்பதாக சில குழுக்கள் செயற்கையாக காட்ட முயற்சிக்கிறார்கள் என்பதற்கு சில அறிகுறிகள் தென்பட்டன. அதனை ஆராய முற்பட்டேன். அதனால்தான் இந்த  ஆராய்ச்சி.

எண்ணத்தை நிறைவேற்ற நீங்கள் எடுத்த முயற்சிகள்?

இதை ஆய்வு செய்ய பல்வேறு வலைதளங்கள் உள்ளன, நாம் அவற்றில் எதில் வேண்டும் என்றா
லும் கணக்கை துவக்கி ஆய்வு செய்யலாம், நான் டிரெண்ட்ஸ்மேப்.காம் (trendsmap.com) வலை தளத்தினை தேர்ந்
தெடுத்தேன்.

ஏதேனும் சவால்கள் தோன்றினவா?

நான் பதினாறு மணி நேரம் செலவழித்து இதனை ஆய்வு செய்தேன். மேலும் இதனை ஆய்வு செய்த பொழுது அது 24 மணி நேரத்திற்கான தகவல்களை மட்டுமே தந்தது,  அதற்கு மேல் தகவல்கள் தேவைபட்டால் மாதம் 6,000- ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். என்னைப்  பொறுத்த
வரை இது தற்காலிகமானது என்பதால் அவ்வளவு பணம் செலவழிக்க விரும்பவில்லை.

இந்த முயற்சியினால் நீங்கள் நாட்டு மக்களுக்கு சொல்ல விரும்புவது என்ன?

சில தீய சக்திகள் நாட்டில் குழப்பம் விளைவிக்க நினைக்கிறார்கள். அவர்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கிடையாது. அவர்கள் நாடு சிதறுண்டு போக வேண்டும் நினைப்பவர்கள். அவர்களுக்கு நரேந்திர மோடி போன்ற வலிமையான தலைவர்களைப் பிடிக்காது. ஊழலில் திளைப்பவர்களுக்கும் மோடி இடையூறாக இருக்கிறார். ஆகவே இவர்களும் பிரிவினைவாதிகளும் கைகோர்த்துக்கொள்கிறார்கள். இதை போன்ற தீய எண்ணம் கொண்ட, நமது தேசத்திற் கெதிரான சில நாடுகளின் வலையில் விழ வேண்டாம்; தவறான தகவல்களை வேண்டும் என்றே பரப்பும் சில ஆங்கில ஊடகங்களையும் நம்ப வேண்டாம் என கேட்டுகொள்கிறேன்.

உங்களுடைய இந்த ஆய்வுக்கு  ஏதாவது பிரத்தியேகமான திறனும், மென்பொருள் செயலிகள் கருவிகள் ஏதேனும் தேவையா?

அப்படி ஒன்றும் பிரத்தியேகமாக எந்த கருவியும் திரமையும் இதற்கு தேவை இல்லை. இண்டர்நெட்டை சரியாக கையாள தெரிந்திருந்தாலே போதும்.

உங்களுக்கு உதவிய நண்பர்களை பற்றி?

அவர்கள் தங்கள் பெயரை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ட்விட்டர் போன்ற சமூகவலை தளங்கள் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

ட்விட்டர், முகநூல் என்று இவை எல்லாம் நேர்மறைக் கருத்துக்களை பின்னுக்கு தள்ளி, புறக்கணித்து எதிர்மறைக் கருத்துக்களுக்கு தேவைக்கு அதிகமான இடம் அளிப்பவை.- முன்னிலைப் படுத்துபவை. மோடிக்கு எதிரான கருத்துக்களை நீங்கள்  எழுதினால் பிரபலம் ஆகும்! ட்ரெண்ட் ஆகும். அதுவும் நீங்கள் காசு கொடுத்தால் இன்னும் வேகம் எடுக்கும். வெகு விரைவில் நீங்கள் பிரபலம் ஆவீர்கள். இதுதான் இவற்றின் லட்சணம்.

அடுத்து இனி வரும் காலங்களில் நாட்டை நேசிக்கும்  ஒவ்வொருவரும் செய்ய வேண்டியது  என்ன?

நான் முன்னரே சொன்னது போல்தான்; தவறான தகவல்களை பரப்பும் ஊடகங்களுக்கு இரையாகாதீர்கள். நம் தேசத்தை வளர்சசி பாதையில் சரியாக வழிநடத்தி சென்று  கொண்டி
ருக்கும் நாம் தேர்ந்தெடுத்த நம் அரசாங்கத்தினை முழுமையாக நம்புங்கள்.

திட்டமிட்ட பிரச்சாரமா அல்லது உண்மையான கருத்தா என்று புரிந்து
கொணடு செயல்படுங்கள்.

விஜயபாரதம் வாசகர்கள் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?

முதலில் இதை படிக்கும் உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். நமது பாரதத்தின் மிக சிறந்த பழமையான நாகரீகத்தினை மீண்டும் நிலைநாட்டிட நாம் தேர்ந்தெடுத்த நமது மக்கள் பிரதிநிதிகளை நாம் அவ்வப்போது அனைத்து நிலை
களிலும் சந்தித்துப் பேசி நம் தேசத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் என்பதை நம் தேசத்தின் குடிமக்களுக்கும் உணர்த்திடுங்கள்.

தமிழ் கல்வெட்டில் அயோத்தி

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் கல்வெட்டில், அயோத்தியில் ராமர் கோயில் இருந்ததற்கான ஆதாரத்தை மத்திய அரசு கல்வெட்டுத் துறையினர் ௧௯௨௩ல் ௪௬ம் கல்வெட்டாகப் படியெடுத்து வைத்துள்ளனர். அந்த கல்வெட்டில், “திருஅயோத்தி நின்றருளிய ஸ்ரீராகவர், அயோத்தி பெருமானடிகள் ஸ்ரீராகவர்என பொறிக்கப்பட்டுள்ளதாக கல்வெட்டு ஆய்வாளர் புலவர் செ.ராசு கூறியுள்ளார்.