” அமலாக்கத்துறையை குற்றம் சொல்ல முடியாது “- அண்ணாமலை பேட்டி

லஞ்சம் வாங்கியதாக புகாருக்கு உள்ளாகி இருக்கும் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், இவரால் மட்டும் அமலாக்கத்துறையையே குற்றம் சொல்ல முடியாது, என தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அமலாக்கத்துறை அதிகாரி கைது குறித்து தூத்துக்குடியில் அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கியுள்ளார். அந்த தனி நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. இதனை அரசியலாக பார்க்கக்கூடாது. ஆனால் இது அரசியல்வாதிகளுக்கு புரியாது. தமிழக அரசியலில் மெச்சூரிட்டி குறைவானவர்களே உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.