பாலுக்கும் காவல் பூனைக்கும் நண்பன்

ஏ.ஐ.டி.யு.எப் கட்சியை சேர்ந்த, அசாம், துப்ரி தொகுதி எம்.பி பத்ருதீன் அஜ்மல். இவர் சீனாவில் அடிமைபடுத்தப்படும் உய்குர் முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து போராடுவதாக காட்டிக் கொண்டவர். ஆனால் இவர் நடத்தும் பத்ருதீன் அஜ்மல் தொண்டு நிறுவனத்துக்கு சீன அரசு நிறுவனமான ரீம் இண்டர்நேஷனலில் இருந்து லட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முறைகேடாக சில பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்தும் இவருக்கு பணம் வந்துள்ளது. இந்த செய்திகளை சட்ட உரிமைகள் ஆய்வகம் எனும் அமைப்பு கண்டறிந்து வெளியிட்டுள்ளது.