ஜெய் ஸ்ரீராம் சொல்ல தடையா?

மேற்கு வங்கத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பேனர்ஜி ஹிந்து விரோத போக்கை கடைபிடிப்பவர். இவர் சில மாதங்களுக்கு முன் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ சொன்னால் சிறையில் போடுவேன் என கூறியிருந்தார். இவரது ஆட்சியில் நூற்றுக்கணக்கான ஹிந்து தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் மம்தாவின் கட்சியை சேர்ந்த ஒரு தலைவர் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என இங்கு கூறக்கூடாது. அதை கூறுபவர்கள் குஜராத்துக்கு செல்லுங்கள் என மேடையில் பேசியுள்ளார். இந்த வெறுப்பு பேச்சு வீடியோவை மேற்கு வங்க பாஜக தன் டிவிட்டரில் பதிந்துள்ளது. விரைவில் தேர்தல் வரவுள்ள சூழலிலும் அவர்கள்  மாறவில்லை என்பதையே இது காட்டுகிறது.