சிரிக்க வைக்கும் சீனா

நம் பாரத சீன எல்லையில் 1962 போரில் இழந்த சில முக்கிய பகுதிகளை மீண்டும் கைப்பற்றியுள்ளது நம் ராணுவம். இதில் மிரண்டுபோன சீனா, நம் ராணுவ வீரர்களின் மன உறுதியை குலைக்க பஞ்சாபி பாடல்கள், ஹிந்தி செய்திகள், பாரத அரசு குறித்த தவறான தகவல்களை அங்கு ஒலிபரப்பி வருகிறது. இதனால் நமது ராணுவத்தினர் மனம் சோர்ந்துவிடுவார்கள் என தப்பு கணக்கு போடுகிறது சீனா. கட்டாய ராணுவ பயிற்சியால் சேர்ந்துள்ள தங்கள் ராணுவத்தினர் பாரதத்தின் பராக்கிரமத்தை பார்த்து பயந்து, எப்போது வீட்டுக்கு ஓடலாம் என காத்திருக்கின்றனர். இதே போல நம் ராணுவத்தினரையும் கோழைகளாக எண்ணியுள்ளது சீனா.

சீனாவின் இந்த புத்திசாலிதனத்தை கண்டு விழுந்து விழுந்து சிரிக்கின்றனர் நம் ராணுவத்தினர்.