கோவையில் காவல் துறையைக் கண்டித்து ஹிந்து அமைப்புகள் பேரணி

கோவை மாநகர காவல் துறையைக் கண்டித்து ஹிந்து அமைப்புகள் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற பேரணியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

கோவையில் இந்து முன்னணி பிரமுகா் ஆனந்த் , ஆா்.எஸ்.எஸ். பிரமுகா் சூரியபிரகாஷ் ஆகியோா் மீது தாக்குதல் நடத்தியவா்களைக் கைது செய்ய வலியுறுத்தியும், பயங்கரவாதத்தைத் தடுக்கத் தவறிய காவல் துறையைக் கண்டித்தும் ஹிந்து அமைப்புகள் சாா்பில் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

தென்னை நாா் வாரிய முன்னாள் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், இந்து முன்னணி மாவட்டத் தலைவா் கே.தசரதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரணிக்குத் தலைமை வகித்த இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கோவையில் இந்து முன்னணி மாவட்டச் செயலா் ஆனந்த் பத்து நாள்களுக்கு முன்பு தாக்கப்பட்டாா். இந்து முன்னணி மாவட்ட தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. ஆா்.எஸ்.எஸ். பொறுப்பாளா் சூரியபிரகாஷ் மீது புதன்கிழமை தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவா்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வன்முறையில் ஈடுபடும் நபா்களைக் காவல் துறையினா் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து அவிநாசி சாலை அண்ணா சிலை அருகே துவங்கிய பேரணி, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வந்தடைந்தது. அங்கு நடைபெற்ற கூட்டத்தில் ஹிந்து அமைப்பின் நிா்வாகிகள் பலா் உரையாற்றினா்.

இதையடுத்து கோரிக்கை குறித்த மனுவை மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணியிடம் ஹிந்து அமைப்பைச் சோ்ந்த நிா்வாகிகள் வழங்கினா். பேரணி காரணமாக 500க்கும் மேற்பட்ட மாநகர போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். அசம்பாவிதங்களைத் தடுக்கும் நோக்கில் வஜ்ரா வாகனம், தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் ஆட்சியா் அலுவலகம் முன்பு நிறுத்தப்பட்டிருந்தன.