கண்காணிக்கப்படும் நபர் வெளியே வந்தால் கடுமையான நடவடிக்கை – அமைச்சர் விஜயபாஸ்கர்

வெளிநாட்டில் இருந்து வந்தவர்களால் பாதிப்பு ஏற்படுகிறது. அவர்கள் வீட்டை விட்டு வெளியே வர கூடாது. மேலும் அவர்களை கடுமையாக எச்சரிக்கிறேன். தகவல் தெரிவிக்காவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நாளை 100 புதிய ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளன.

கண்காணிக்கப்படும் நபர் வெளியில் நடமாடுவது தெரிய வந்தாலும் கடுமயைானநடவடிக்கை எடுக்கப்படும். 28 நாட்கள் வீட்டில் தனிமை படுத்திக்கொள்வதை கட்டாயமாக்கி கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனையில் தேவையான உபகரணங்கள் உள்ளன. வெளிநாடுகளில் இருந்து வந்த 15,298 பேர் கண்காணிக்கப்படுகின்றனர்.

ஒரு கோடி முக கவசங்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் ஊரடங்கு போன்ற நிலை தான் உள்ளது.