ஆர்.எஸ்.எஸ் விஜயதசமி விழாவில் சிவ நாடார்

மராட்டிய மாநிலம்  நாக்பூரில் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நிகழ்ச்சி ஒன்றை இன்று நடத்தியது.  இந்நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத், மகாராஷ்டிர முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மத்திய மந்திரிகளான நிதின் கட்காரி மற்றும் வி.கே. சிங் (ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ தளபதி) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய எச்.சி.எல். நிறுவனர் சிவ  நாடார்  கூறியதாவது;-
நாடு பல சவால்களை எதிர்கொள்கிறது, ஆனால் அரசாங்கத்தால் மட்டுமே பிரச்சினைகளை தீர்க்க முடியாது. இந்த சவால்களை சமாளிக்க தனியார் துறை, குடிமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பங்காற்ற வேண்டும்.
ராவணன் மீது ராமரின் வெற்றியை தசராவாக கொண்டாடுகிறோம். அதர்மத்தின் மீது தர்மம் … தீமைக்கு எதிராக  நன்மை. உள்ளேயும் வெளியேயும் தீமையைத் தோற்கடிப்பதற்கான தொடர்ச்சியான போராட்டம் இது.
இன்று உங்களுடன் பேசவும், கொண்டாட்டங்களில் பங்கெடுக்கவும்  அழைக்கப்படுவது எனக்கு மரியாதை மற்றும் எனக்கு பாக்கியம் ஆகும்.  அனைத்து ஆர்.எஸ்.எஸ் தொழிலாளர்களின் ஆற்றலுடனும் இன்று ரெஷிம்பாக் மைதானம் உண்மையிலேயே உயிரோட்டமாக உள்ளது என கூறினார்.