ஹிண்டன்பர்க் மீது மோசடி வழக்கு

உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல் சர்மா ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் “அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற முதலீ்ட்டு ஆய்வு நிறுவனம், அதானி குழுமத்தின் பங்குகளை செயற்கையாக வீழ்ச்சி அடைய செய்துள்ளது. அப்பாவி முதலீட்டாளர்களை தனது சுயநலத்துக்காக பலியாக்கிவிட்டது. பாரதத்தின் பங்குச்சந்தையையும் அதன் கட்டுப்பாட்டு அமைப்புகளையும் வஞ்சித்துள்ளது. அந்நிறுவனம், பங்குகளை கடனுக்கு விற்று பின்னர் அவற்றை குறைந்த விலைக்கு வாங்கும் செயலில் ஈடுபட்டதை மோசடியாக அறிவிக்க வேண்டும். அந்த நிறுவனத்தின் மீது மோசடி வழக்கு தொடர வேண்டும்” என கோரியுள்ளார். இந்த மனு, விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு உள்ளது.