லெக்கிம்பூர் கெரி குற்றவாளி கைது

உத்தர பிரதேசம், லெக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் தொகுதித் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய வந்த, சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ரிது சிங் மற்றும் அவரது உதவியாளருடன் தவறாக நடந்து கொண்ட ஒருவரை உத்தரபிரதேச காவல்துறை கடந்த வெள்ளிக்கிழமை அன்று கைது செய்தது. கைது செய்யப்பட்டவர், பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட ஒரு சுயேச்சை வேட்பாளரின் ஆதரவாளர் என கண்டறியப்பட்டது. இதில் மெத்தனமாக செயல்பட்ட ஒரு டி.எஸ்.பி, எஸ்.எச்.ஓ, ஒரு ஆய்வாளர், மற்றும் 3 துணை ஆய்வாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மற்ற குற்றவாளிகளை கைது செய்ய நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், குற்றவாளிகளுக்கு எதிராக, தேசிய பாதுகாப்புச் சட்டம் மற்றும் கேங்க்ஸ்டர் சட்டத்தின்படி, கடுமையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டார்.