லாட்லி பெஹ்னா யோஜனா

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், போபால் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், “நமது மாநிலத்தில் பெண்கள் வாழ்க்கையை எளிதாக நடத்திச் செல்ல வேண்டும் என விரும்புகிறேன். அதனால், இதற்கு முன்னர் நடைமுறையில் உள்ள திட்டங்களுடன் சேர்த்து தற்போது துவங்கப்படவுள்ள ‘லாட்லி பெஹ்னா யோஜனா’ திட்டமும் பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தும். இதன்படி, மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஏழை பெண்கக்கு இனி மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும். வரும் மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினத்தில் இருந்து இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்களை பெறும் நடைமுறை தொடங்கும். வேறு மாநிலங்களில் நடைபெறாத விஷயங்கள் மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்று வருகின்றன. மாநிலத்தில் அரசு திட்டங்களை பலன் பெற தகுதியான 83 லட்சம் பேர் முதல்வர் ஜனசேவா அப்யான் திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 38 வெவ்வேறு திட்டங்களின் பலனை பெறுவதற்காக இந்த குடிமக்கள் அனைவருக்கும் ஒப்புதல் கடிதங்கள் வினியோகிக்கும் பணி நடந்து வருகிறது. இதில், விடுபட்ட மக்களுக்காக விகாஸ் யாத்ரா என்ற பெயரிலான திட்டமும் பிப்ரவரி 5 முதல் தொடங்கும்” என கூறினார்.