பாகிஸ்தானில் ஹிந்து கோயில் மீட்பு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள லாகூரில் அனார்கலி பஜார் என்ற இடத்தில் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த வால்மீகி கோயில் உள்ளது. இந்த கோயிலை கிறிஸ்தவ குடும்பம் ஒன்று கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் ஆக்கிரமித்தது. அவர்கள் ஹிந்து மதத்துக்கு மாறிவிட்டதாகக் கூறி அந்த சொத்தை அனுபவித்து வந்தனர். ஆனால், கோயிலில் வழிபாடு நடத்த யாரையும் அவர்கள் அனுமதிக்கவில்லை. பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்களை பராமரிப்பதற்காக செயல்படும் சொத்து அறக்கட்டளை வாரியம், கோயிலை மீட்கும் முயற்சியில் இறங்கியது. நீதிமன்றத்தில் வழக்கு தடுக்கப்பட்டது. நீண்ட சட்ட போராட்டத்துக்கு பின் வால்மீகி கோயில் சொத்து அறக்கட்டளை வாரியத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அந்த கோயில் மீண்டும் திறக்கப்பட்டது. ஹிந்துக்கள் அங்கு வழிபாடு செய்தனர். விரைவில் கோயிலை புணரமைக்க உள்ளதாக அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.