தொலைகாட்சிகளுக்கு நீதிமன்றம் தடை

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இந்த எந்திரம் வாங்கி வீட்டில் வைத்தால் செல்வம் கொழிக்கும், இந்த மோதிரம் போட்டுக்கொண்டால் தொழில் பெருகும் என்று போலியாக மக்களை ஏமாற்றி விளம்பரங்கள் வெளியாகின்றன. பலரும் இதை நம்பி ஏமாந்து வருகின்றனர். இது தவறான நடைமுறை. இதுபோன்ற நிகழ்ச்சிகளை வெளியிடும் தொலைக்காட்சிகள் மீது கண்கட்டி வித்தைகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மும்பை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. ஹிந்து வழிபாட்டு முறைகள், நம்பிக்கைகள் படி இவை உண்மை என்றாலும், அவை வியாபார ரீதியில் தயாரித்து விற்கப்படுவது உண்மை பலனை தராது என்பதை மக்கள் அறிய வேண்டும்.