தேஜஸ் வாங்கும் அர்ஜென்டினா

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரண்டு நாள் பயணமாக அர்ஜென்டினா சென்றுள்ளார். அப்போது, அந்நாட்டு அதிபர் ஆல்பெர்டோ பெர்ணாண்டசையும், பின்னர் வெளியுறவுத்துறை அமைச்சர் சன்டியாகோ கபிரியோவை சந்தித்து பேசினார். பிறகு இரு நாடுகளும் கூட்டாக அறிக்கை வெளியிட்டன. அதில், ‘பாரதம் தயாரிக்கும் தேஜஸ் போர் விமானத்தை வாங்கவும், அதை தனது விமானப்படையில் இணைக்கவும் அர்ஜென்டினா ஆர்வம் கொண்டுள்ளது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது. மேலும், ஆயுதப்படை அதிகாரிகள் இரு நாடுகளுக்கும் பரஸ்பட பயணம், பாதுகாப்பு பயிற்சிகள், பாதுகாப்பு தளவாடங்களை இரு நாடுகளும் இணைந்து தயாரிப்பது. பாதுகாப்பு அணுசக்தி மற்றும் விண்வெளி ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது.