தமிழக காவல்துறைக்குப் பாராட்டு

தேசிய அளவிலான காவல்துறையினருக்கான 23வது துப்பாக்கிச் சூடு போட்டிஜனவரி 9 முதல் 13 வரை செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழக காவல்துறை அதிரடிப்படை துப்பாக்கிஸ் சுடும் மைதானத்தில் நடந்தது. இதில், முதலிடம் வென்ற தமிழகக் காவல்துறைக்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது சமூக ஊடகப் பதிவில், “தேசிய அளவிலான காவல்துறையினருக்கான துப்பாக்கிச் சூடு போட்டியில் முதல் இடமும், ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப்பில் இரண்டாவது இடமும் வென்ற தமிழக காவல்துறைக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், கைத்துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், முதலிடம் வென்ற தமிழக வீரர் ஆர். சதிசிவனேஷிற்கு என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதன்முறையாக, மாநில காவல்துறையைச் சேர்ந்த வீரர் இப்போட்டியில் வெல்வது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. தமிழக அணி தேசிய அளவில் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்” என கூறி பாராட்டியுள்ளார்.