சுற்றுச்சூழலுக்கு உகந்த பாரத கலாச்சாரம்

எகிப்தில் உள்ள ஷர்ம் எல் ஷேக்கின் சிஓபி மாநாட்டின் 27வது அமர்வில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், பாரதத்தின் அரங்கை திறந்து வைத்தார். இம்மாநாடு நவம்பர் 6 முதல் 18 வரை நடைபெறுகிறது. அனைத்து நாடுகளின் பிரதிநிதிகளை பாரதத்தின் அரங்குக்கு வரவேற்ற அமைச்சர், “சிக்கலான பருவநிலை மாற்ற பிரச்சனைக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி எளிய தீர்வை வழங்கியுள்ளார். இதற்காக துவக்கப்பட்ட ‘மிஷன் லைஃப்’ இந்த பூமியின் பாதுகாப்பிற்காக மக்களின் அதிகாரங்களை இணைத்து, அதை சிறந்த முறையில் பயன்படுத்த அவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறது. மிஷன் லைஃப் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தை ஜனநாயகப் பூர்வமானதாக ஆக்குகிறது. அதில் ஒவ்வொருவரும் அவரவர் திறனுக்கு ஏற்ப பங்களிக்க முடியும். சிறிய முயற்சிகள் கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என மிஷன் லைஃப் நம்புகிறது என்று  பிரதமர் மோடி கூறியிருந்தார். பருவ நிலை நடவடிக்கை அடிமட்ட, தனிநபர் மட்டத்தில் இருந்து தொடங்குகிறது என்று பாரதம் நம்புகிறது. எனவே வாழ்க்கை, சூழலுக்கான வாழ்க்கை முறை என்ற கருப்பொருளுடன் பாரதம் இந்த அரங்கை வடிவமைத்துள்ளது. பாரதத்தின் அரங்கு, எளிய வாழ்க்கை முறை மற்றும் இயற்கையில் நிலையான தனிப்பட்ட நடைமுறைகள் அன்னை பூமியைப் பாதுகாக்க உதவும் என்பதை பிரதிநிதிகளுக்கு நினைவூட்டும். பல நூற்றாண்டுகளாக, பாரத நாகரிகங்கள் நிலையான வாழ்க்கை முறையை கடைப்பிடித்து வழிவகுத்துள்ளன என்பதே அரங்கின் வடிவமைப்பில் உள்ள வழிகாட்டும் சிந்தனையாகும். சுற்றுச்சூழலுக்கு உகந்த பழக்கவழக்கங்கள் பாரத கலாச்சாரத்தில் குறியிடப்பட்டுள்ளன. இயற்கை சூழலுக்கு மரியாதை காட்டும் பல நடைமுறைகள் அன்றாட வாழ்வில் வேரூன்றியுள்ளன. காலநிலை மாற்றத்திற்கு எதிரான நமது போராட்டத்தில் அவை விலைமதிப்பற்றவை என்பதை நிரூபிக்க முடியும். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்ட நிலைத்தன்மை பற்றிய இந்த ஆழமான அறிவுதான் பிரதமர் மோடியை உலகிற்கு வாழ்க்கைக்கான மந்திரத்தை வழங்க வழிவகுத்தது. இது பூமி கிரகத்தின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும். உலகளாவிய காலநிலை நெருக்கடியைக் கையாள்வதில் லைஃப் இயக்கம் பாரதத்தின் பங்களிப்பாகும். லைஃப் இயக்கம், நவீன உலகில் நிலையான வாழ்க்கை முறையைப் பின்பற்றும் நபர்களை ‘கோள் சார்பு மக்களாக’ மாற்ற முயல்கிறது. பருவநிலை நிதி தொடர்பான விவாதங்களில் கணிசமான முன்னேற்றத்தை பாரதம் எதிர்பார்க்கிறது” என கூறினார்.