சுதந்திரம் 75 சூர்ய நமஸ்கார்

சுதந்திரம் அடைந்த 75வது வருடத்தை முன்னிட்டும் எதிர்வரும் ரதசப்தமியை முன்னிட்டும் தேசம் முழுவதும் ‘சூர்ய நமஸ்காரம்’ செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 30 அன்று துவங்கிய இந்த ‘சூர்ய நமஸ்கார்’ மகாவேள்வி, தேசத்தின் அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 7 திங்கட்கிழமை ரதசப்தமி அன்று காலை 8 மணிக்கு தேசம் முழுவதும் அனைவரும் ஒரே நேரத்தில் சூர்ய நமஸ்கார் செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டு உள்ளது. இதில் நாமும், நமது குடும்பத்தில் உள்ளவர்களும் கலந்து கொண்டு நம்மால் முடிந்த அளவு சூரிய நமஸ்காரம் செய்ய முயற்சிப்போம். உறவினர் நண்பர்களுக்கும் இதனை எடுத்துச் சொல்வோம்.