சீக்கிய கலவரக்காரர்கள் கைது

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிராக நடந்த வன்முறைகளில், வீடுகளுக்கு தீ வைத்த கும்பலைச் சேர்ந்த மேலும் ஐந்து பேரை சிறப்பு புலனாய்வு குழுவினர் உத்தரப் பிரதேசத்தில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ரவிசங்கர் மிஸ்ரா, போலா காஷ்யப், ஜஸ்வந்த் ஜாதவ், ரமேஷ் சந்திர தீட்சித், கங்கா பக்ஷ் சிங் ஆகிய அந்த ஐந்து பேரும் கித்வாய் நகரைச் சேர்ந்தவர்கள். இந்த வழக்குத் தொடர்பாக இதுவரை 11 பேரை சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி) கைது செய்துள்ளது. மேலும், இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள அனைவரையும் விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முன்னதாக சிறப்பு புலனாய்வுக் குழு 96 பேரை பிரதான சந்தேக நபர்களாக அடையாளம் கண்டுள்ளது, அவர்களில் 22 பேர் இறந்துவிட்டனர்.