கோயிலை சேதப்படுத்திய முஸ்லிம்கள்

பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் உள்ள லட்சுமி நாராயண் கோயிலில் அடையாளம் தெரியாத சில முஸ்லிம் நபர்கள் தாக்குதல் நடத்தி கோயிலில் உள்ள சிலையை உடைத்து சேதப்படுத்தினர். மேலும், கோயிலுக்குள் முஸ்லிம் மதக்கொடியையும் நட்டுவைத்து சென்றுள்ளனர். அப்பகுதி மக்கள் மறுநாள் காலையில் கோயிலுக்கு சென்றபோது இதனை காண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை அறிந்த அப்பகுதி பா.ஜ.க எம்.பி பிரதீப் குமார் சிங், குற்றவாளிகளை சட்டத்தின் முன் உடனடியாக நிறுத்த வேண்டும் என அரசு நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்தார். குற்றவாளிகளை விரைவில் கண்டறிந்து கைது செய்வதாக காவல்துறையினர் உறுதியளித்தனர். மேலும், கிராமத்தில் அமைதியை நிலைநாட்டும் வகையில் காவல்படையும் குவிக்கப்பட்டுள்ளது.