கோயிலில் கொள்ளை

பீகார் மாநிலம் சாப்ராவில் உள்ள ஜோகி பாபா மடத்திற்கு அருகில் அமைந்துள்ள ராம் ஜானகி கோயில் உள்ளது. இங்கு இரவில் நுழைந்த அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள், கோயில் தங்கியிருந்த 75 வயதான பூஜாரி கோரக்நாத் தாசைக் கொன்று கோயிலில் இருந்த பல கோடி மதிப்புள்ள 13 கடவுள் சிலைகளைத் திருடிச் சென்றனர். காவல்துறை இதை குறித்து விசாரித்து வருகிறது. கொள்ளையர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என டி.எஸ்.பி முனேஷ்வர் பிரசாத் சிங் தெரிவித்துள்ளார். எனினும், காவல்துறை முறையாக விசாரணை நடத்தவில்லை, உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை என பொதுமக்கள் குற்ற்ம் சாட்டுகின்றனர். காரணம், இந்த கோயில் கொள்ளை சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன், கோயிலின் அருகில் இருந்த பி.என் ஜூவல்லர்ஸ் கடையில் கொள்ளையர்கள் சிலர் ஒரு கோடி மதிப்பிலான நகைகளுடன் தப்பிச் சென்றனர்.