கேதார்நாத் கோயில் திறப்பு

கேதார்நாத் கோயில் வரும் மே 6, 2022 அன்று காலை 6.25 மணிக்கு விருச்சிக லக்னத்தில் பக்தர்களுக்காக திறக்கப்படும் என பத்ரி கேதார் கோயில் கமிட்டி நிர்வாகம் தெரிவித்துள்ளது. குளிர்காலத்தில் ஆறு மாதங்களுக்கு கேதார்நாத் கோயில் மூடப்படும். அவ்வகையில் கடந்த நவம்பர் 6 அன்று கோயில் மூடப்பட்டது. அந்த 6 மாத காலத்திற்கு உத்தராகண்டின் உகிமத்தில் உள்ள ஓம்காரேஷ்வர் கோயிலில் தான் சுவாமி கேதார்நாத்தை மக்கள் வழிபடுவார்கள். மேலும், கோயில் திறப்பையொட்டி மே 2 அன்று சிவபெருமானின் பஞ்சமுகி சிலை இக்கோயிலில் இருந்து கேதார்நாத்திற்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் புறப்பட உள்ளது.