கூட்டுப் போர் பயிற்சி

ரஷ்யாவின் 325வது கடற்படை தின கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக நம் நாட்டின் ஐ.என்.எஸ் தபார் போர்க்கப்பல் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் கடற்படை தளத்திற்கு சென்றது. இதன் ஒரு பகுதியாக இரு நாடுகளும் பால்டிக் கடற்பகுதியில் போர் பயிற்சிகளை மேற்கொண்டன. இரு நாடுகளுக்கு இடையிலான நட்பு, ஒருங்கிணைந்த செயல்பாடுகளை வலுப்படுத்தும் விதமாக ‘இந்திரா’ என அழைக்கப்படும் இந்த கடற்படை பயிற்சி இரு நாடுகளுக்கு இடையே ஆண்டு தோறும் நடைபெறுகிறது.