ஐ.பி.எஸ் அதிகாரி மீது தேசதுரோக வழக்கு

சத்தீஸ்கரில் ஜி.பி சிங் என்ற ஐ.பி.எஸ் அதிகாரி முறைகேடாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரை அடுத்து ஊழல் தடுப்பு பிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை நடத்தினர். அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சோதனையில் கிடைத்த ஆவணங்கள் மூலம், அவர் அரசுக்கு எதிராகவும், மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராகவும் சதி செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதன் அடிப்படையில், அவர் மீது தேச துரோக வழக்கு, மதம், மொழி அடிப்படையில் இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.