எதுவும் நிரந்தரமில்லை

உலகப் புகழ்பெற்ற டிசைனர் கிரிஸ்டா ரோட்ரிக் கேன்சரால் இறந்து போனார். அவர் கடைசியாக எழுதிய வார்த்தைகள்…

மரணத்தைவிட உண்மையானது இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. இந்த உலகத்தில் விலை உயர்ந்த பிராண்டட் கார் என்னுடைய கேரேஜில் நிற்கிறது. ஆனால் நான் சக்கர நாற்காலியில் அழைத்து செல்லப் படுகிறேன். இந்த உலகத்தில் உள்ள அனைத்து வகையான டிசைன்களிலும் கலர்களிலும் விலை உயர்ந்த ஆடைகள் விலை உயர்ந்த காலணிகள் விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தும் என் வீட்டில் உள்ளது. ஆனால் நான் மருத்துவமனை வழங்கிய சிறிய கவுனில் இருக்கிறேன்.

என் வங்கிக் கணக்கில் ஏராளமான பணம் கிடக்கிறது. ஆனால், அது எதுவும் எனக்குப் பயன் இல்லை. என் வீடு அரண்மனை போன்றும் கோட்டை போன்றும் உள்ளது. ஆனால் நான் மருத்துவமனையில் ஒரு சிறு  படுக்கையில் கிடக்கிறேன். இந்த உலகத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு நான் பயணித்துக் கொண்டே இருந்தேன். ஆனால் இப்போது மருத்துவமனையில் உள்ள ஆய்வகங்களுக்கும் மற்றொரு லேபிற்க்கும் மாற்றி மாற்றி அழைத்துச் செல்லப்படுகிறேன்.

அன்று தினசரி 7 சிகை அலங்கார நிபுணர்கள் எனக்கு அலங்காரம் செய்வார்கள். ஆனால் இன்று என் தலையில் முடியே இல்லை. உலகிலுள்ள பல வகையான உயர் நட்சத்திர ஓட்டல்கள் உணவுகளை உண்டு கொண்டிருந்தேன். ஆனால் இன்று பகலில் இரண்டு மாத்திரைகள் இரவில் ஒரு துளி உப்பு. தனியார் ஜெட்டில் உலகம் முழுவதும் பறந்து கொண்டிருந்தேன். ஆனால் இன்று மருத்துவமனை வராந்தாவிற்கு வருவதற்கு இரண்டு நபர்கள் உதவுகிறார்கள். எல்லா வசதி வாய்ப்புகளும் எனக்கு உதவவில்லை.  எந்த விதத்திலும் ஆறுதல் தரவில்லை. ஆனால் சில அன்பானவர்களின் முகங்களும் அவர்களது வேண்டுதல்களும் என்னை வாழவைத்துக் கொண்டிருக்கிறது.

நம்முடன் வருவது நாம் செய்யும் தானம் தர்மம் புண்ணியம்தான்…

(சமூக ஊடகத்தில் இருந்து)