எதிர்கட்சிகளுக்கு வாக்களித்தால் அவர்களின் குடும்பமே வளம் பெரும்; மோடி

கடந்த 2014, 2019 தேர்தல்களை போன்று வரும் 2024 மக்களவைத் தேர்தலிலும் பாஜகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. இதன்காரணமாக எதிர்க்கட்சிகள் அச்சத்தில் உறைந்துள்ளன. கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது 1.86 லட்சம் கோடி அளவுக்கு நிலக்கரி ஊழல், 1.76 லட்சம் கோடி அளவுக்கு 2ஜி அலைக்கற்றை ஊழல், ரூ.70,000 கோடி அளவுக்கு காமன்வெல்த் ஊழல்கள் அரங்கேறின. தமிழகத்தில் திமுக தலைவர்களின் சொத்து மதிப்பு ரூ. 1.25 லட்சம் கோடியாக இருக்கிறது. ஒட்டுமொத்தமாக பல மாநிலங்களிலும் நடந்துள்ள அனைத்து ஊழல்களையும் ஒன்றிணைத்தால் ரூ.20 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருக்கிறது. வாரிசு அரசியலின் தீமைகள் குறித்து நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். திமுகவுக்கு வாக்களித்தால் கருணாநிதியின் வாரிசுகள் பலன் அடைவார்கள். பிஆர்எஸ் கட்சிக்கு வாக்களித்தால் சந்திரசேகர ராவ் குடும்பத்தினர் வளம் பெறுவார்கள். காங்கிரஸுக்கு வாக்களித்தால் காந்தி (சோனியா காந்தி) குடும்பத்தினர் வளமடைவார்கள். சமாஜ்வாதிக்கு வாக்களித்தால் முலாயம்சிங் குடும்பத்தினர் வளமடைவார்கள். சரத்பவார் கட்சிக்கு வாக்களித்தால் அவரது குடும்பம் வளம்பெரும். உங்கள் பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் நலமாக, வளமாக வாழ விரும்பினால் பாஜகவுக்கு வாக்களியுங்கள்.

மத்திய அரசின் மக்கள் மருந்தகம் திட்டம் மூலம் குறைந்த விலையில் மருந்துகள் விற்கப்படுகின்றன. இதன்மூலம் மக்களின் பணம் ரூ.20,000 கோடி அளவுக்கு மிச்சமாகி இருக்கிறது. ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் இதுவரை 5 கோடிக்கும் மேற்பட்டோர் பலன் அடைந்துள்ளனர். இந்த வகையில் மக்களின் பணம் ரூ.80,000 கோடி அளவுக்கு சேமிக்கப்பட்டு இருக்கிறது. பாஜகவை பொருத்தவரை கட்சியைவிட நாட்டின் நலனே உயர்ந்தது. இவ்வாறு பிரதமர் பேசினார்.