உணவு சாப்பிட வந்தவர்களை தாக்கிய முஸ்லிம் கும்பல்

கர்நாடக மாநிலம் சிக்பளாப்பூர் மாவட்டத்தில் உள்ள டவுன் கார்கானே பேட்டே பகுதியில் செயல்படும் ஒரு தனியார் ஓட்டலுக்கு சிக்பளாப்பூர் டவுன் பகுதியில் வசித்து வரும் ஒரு முஸ்லிம் இளம்பெண்ணும், சிட்லகட்டா தாலுகா திப்பூரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஹிந்து இளைஞர் ஒருவர் உணவு சாப்பிட வந்தார். அவர்கள் இருவரும் சிக்பளாப்பூர் டவுன் எம்.ஜி.சாலையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகின்றனர். இருவரும் ஓட்டலில் இருந்ததைப் பார்த்த அப்பகுதி முஸ்லிம் இளைஞர்கள் அங்கு வந்தனர். அவர்கள் அந்த பெண்ணுடன் இருந்த ஹிந்து வாலிபரை பிடித்து, தகாத வார்த்தைகளால் திட்டி கடுமையாகத் தாக்கியுள்ளனர். மேலும், அந்த வாலிபரை அண்ணன் என்று அழைக்குமாறு அந்த இளம்பெண்ணுக்கும் தொல்லை கொடுத்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் அந்த கும்பல் தாக்கியது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சிக்பளாப்பூர் டவுன் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட நக்கலகுண்டே பகுதியைச் சேர்ந்த வாகித், சதாம் ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள இம்ரான் என்பவரை தேடி வருகின்றனர்.